மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு

மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு

Published on

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,720-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கம் விலை பவுனுக்கு ரூ.55 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.6,840-க்கும், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,720-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.58,480-க்கு விற்பனையானது. இதன் மூலம், தங்கம் விலை பவுனுக்கு ரூ.55 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.100.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,500 ஆக இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in