Published : 16 Apr 2018 10:13 AM
Last Updated : 16 Apr 2018 10:13 AM

`பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீட்டை குறைக்கும் பண்ட் மேலாளர்கள்’

நடப்பாண்டில் மியூச்சுவல் பண்ட் மேலாளர்கள் நிதிச்சேவை பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் பொதுத்துறை வங்கி பங்குகளில் உள்ள முதலீட்டை குறைக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மியூச்சுவல் பண்ட் மேலாளர்கள் முதலீடு தொடர்பாக மார்னிங்ஸ்டார்ட் வல்லுநர் ஹிமன்ஷு ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

நுகர்வோர் துறைப் பங்குகள், நிதிச்சேவை பங்குகளில் இந்த ஆண்டு அதிக கவனம் இருக்கும். பொருளாதாரம் மீண்டு வரும் போது இந்தத் துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு பயனளிக்கும்.

இதேபோல டெக்னாலஜி துறைப் பங்குகளிலும் பண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட சில பங்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள மோசடி காரணமாக பண்ட் மேலாளர்கள், தங்களுடைய போர்ட்போலியோவில் பெரிய அளவிலான மாறுதல்கள் செய்யமாட்டார்கள். ஆனால் பொதுத்துறை வங்கி பங்குகளில் செய்துள்ள முதலீட்டை சிறிதளவு குறைப்பார்கள். இந்த நிதியை தனியார் வங்கி பங்குகள் மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகளில் முதலீடு செய்வார்கள்.

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலைமையில் தெளிவு கிடைக்கும் வரை பண்ட் மேலாளர்கள் இந்த வங்கி பங்குகளில் காத்திருக்கும் வாய்ப்பே அதிகம். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போர், சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அமெரிக்காவின் வட்டி விகித நிலைபாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டே பண்ட் மேலாளர்களின் முதலீடு இருக்கும். இந்தக் காரணங்களால் அந்நிய நிறுவன முதலீட்டில் சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம் என ஸ்ரீவஸ்தவா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x