Published : 29 Apr 2018 08:38 AM
Last Updated : 29 Apr 2018 08:38 AM
முக்கிய விமான நிறுவனமான இண்டிகோவில் இருந்து அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா கோஷ் ராஜினாமா செய்திருக்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது. ஜூலை மாதம் இறுதியில் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார். இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நிறுவனர்களுல் ஒருவரான ராகுல் பாட்டியா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பாட்டியா ஏற்கெனவே இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.
அதே சமயத்தில் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கிரிகோரி டெய்லர் நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மூத்த ஆலோசகராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் மாதங்களில் ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதிக்கு பிறகு இவரது நியமனம் குறித்து முறையாக அறிவிக்கப்படும். இவர் விமான போக்குவரத்து துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
ஆதித்யா கோஷ் பத்தாண்டுகளுக்கு மேலாக இண்டிகோவின் சிஇஓ-வாக இருந்தவர். பெரும்பாலான தலைமைச் செயல் அதிகாரிகள் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் படித்தவராக இருப்பார்கள். ஆனால் இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். புதிதாக நிறுவனம் தொடங்க இருப்பதால் இண்டிகோவில் இருந்து ராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT