Published : 08 May 2024 05:00 AM
Last Updated : 08 May 2024 05:00 AM

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

மும்பை

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் வெளியேறியதையடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 380 புள்ளிகள் சரிந்து 73,511 புள்ளிகளாகவும், நிஃப்டி 140 புள்ளிகள் குறைந்து 22,302 ஆகவும் நிலைத்தன.

திங்கள்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.403.39 லட்சம் கோடியாக இருந்த நிலையில் நேற்று அது ரூ.397.90 லட்சம் கோடியாக சரிந்தது. உலோகம், மோட்டார் வாகனம், பொறியியல், நுகர்வோர் சாதனங்களைச் சேர்ந்த பங்குகள் அதிகம் சரிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x