Published : 12 Apr 2018 09:04 AM
Last Updated : 12 Apr 2018 09:04 AM
அசோக் லேலண்ட் நிறுவனத் தின் ஆறு பாதுகாப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவிடந்தையில் நடைபெற்றுவரும் ராணுவ தளவாட கண்காட்சியில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எளிய சிறப்பு வாகனம் , சரக்கு வாகனம், குண்டு துளைக்காத வாகனம், பீரங்கி குண்டுகளை எடுத்து செல்லும் வாகனம் உட் பட ஆறு பாதுகாப்பு வாகனங்களை இந்திய ராணுவத்துக்காக அசோக் லேலண்ட் அறிமுகப் படுத்தியுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி பேசுகையில்,
பாதுகாப்புப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்துவதற்கான வாகனங்களைத் தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றைத் உற்பத்தி செய்யும் திட்டமில்லை என்றும் கூறினார்.
ரூ.800 கோடி அளவுக்கு பாதுகாப்புத் தொழில்களுக்கான ஆர்டர்களை நிறுவனம் கைவசம் வைத்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது ரூ.5,000 கோடியாக மாறும். இந்தத் துறையின் ஒப்பந்தங்களும், செயல்பாடுகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. எனவே எங்களுக்கு இந்தத் துறையில் போதுமான நம்பிக்கை உள்ளது.
சிறப்பு வாகனங்களைத் தயாரிக்க 98 சதவீதம் உள்ளூர் பொருட்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.முன்பு இந்திய ராணுவத்தின் 1 சதவீத ஒப்பந்தத்தை மட்டும் பெற்றுவந்த நாங்கள் இன்று 20 முதல் 25 % ஒப்பந்தங்களைப் பெறும் அளவுக்கு நாங்கள் முன்னேறி இருக்கிறோம் என தாசரி கூறினார்.
நேற்றிலிருந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகைதர இருக்கிறார். இந்தியா: வளரும் பாதுகாப்பு உற்பத்தி மையம் என்பது கண்காட்சியின் மையக் கருத்தாக அறிவிக்கப் பட்டுள் ளது.
முன்னதாக சியாச்சின் போரில் உயிரிழந்த லேன்ஸ் நாயக் ஹனுமத்தப்பா கொப்பாடின் மனைவி மஹாதேவி பிலேபால் இந்த வாகனங்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT