Published : 06 May 2024 04:04 AM
Last Updated : 06 May 2024 04:04 AM

பாரம்பரிய சிறு வணிகம் முடங்காமல் பாதுகாக்க வணிகர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்: அன்னிய முதலீடும், இணையதள வணிகமும், ஊக வணிகமும் இந்திய பாரம்பரிய சிறு வணிகத்தை முடக்கி விடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, வணிகர்களின் பிரச்சினைகள் மற்றும் அதைத் தீர்ப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ்குமார், மாநிலப் பொருளாளர் வி.என்.ராஜா, மாநில செய்தித் தொடர்பாளர் எம்.பி.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை வழங்கினர்.

மாநாட்டின் போது, “இந்தியாவில் புதிதாக ஒன்றிய அரசு உப்பு, அரிசி,கோதுமை ஆகிய உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்,பேரிடர் காலங்களில் வணிக இழப்புகளைக் கணக்கில் கொண்டு, சிறு, குறுவணிகர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். வணிகர் தினத்தை அரசு விழாவாகத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். வணிகர் நல வாரியம் மூலம் 60 வயதைக் கடந்த வணிகருக்குஓய்வூதியம் வழங்கத் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்னிய முதலீடும், இணையதளவணிகமும், ஊக வணிகமும் இந்திய பாரம்பரிய சிறு வணிகத்தை முடக்கிவிடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் உன்னிப்பாய் கவனித்து, வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் நெகிழிப் பொருட்களைத் தடைசெய்ய வேண்டும். அரசு கட்டுமான பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x