Published : 04 May 2024 05:51 AM
Last Updated : 04 May 2024 05:51 AM

சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு

கோப்புப்படம்

மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 732.96 புள்ளிகள் குறைந்து 73,878.15 ஆகவும், நிஃப்டி 172.35 புள்ளிகள் குறைந்து 22,475.85 ஆகவும் சரிந்தது. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.98 %, நிஃப்டி 0.76 % சரிவைக் கண்டன.

பங்குகள் சரிவு: எல் அண்டு டி (2.82%), ஜேஎஸ்டபிள்யூ (2.57%), மாருதி சுசூகி (2.51%), நெஸ்லே (2.24%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.24%), பார்தி ஏர்டெல் (2.14%), டாடா மோட்டார்ஸ் (1.75%), கோடக் மஹிந்திரா பேங்க் (1.69%), அல்ட்ராடெக் சிமெண்ட் (1.58%) என்ற அளவில் சரிந்தன. அதேசமயம், பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க்,விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. நிஃப்டி குறியீட்டில் உள்ள 50 பங்குகளில் 35 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவைக் கண்டன.

நேற்றைய சரிவால், முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்றது, நேற்றைய சரிவுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஆசியாவில் ஹாங்காங் பங்குச் சந்தை ஏற்றத்திலும், தென்கொரிய பங்குச் சந்தை இறக்கத்திலும் காணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x