Published : 11 Apr 2018 09:13 AM
Last Updated : 11 Apr 2018 09:13 AM

நடப்பு நிதி ஆண்டு சராசரி சம்பள உயர்வு 9.6%: கேபிஎம்ஜி அறிக்கை

நடப்பு நிதி ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 9.6 சதவீதமாக இருக்கும் என கேபிஎம்ஜி நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறது. சிறப்பு தகுதி வாய்ந்த நபர்களுக்கு அதிக பட்சம் 14.7 % வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கேபிஎம்ஜி நிறுவனத்தின் விஷாலி டோங்ரி தெரிவித்தார்.

18 துறைகளைச் சேர்ந்த 270 நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் இந்த சம்பள உயர்வு கிடைக்கும் என கேபிஎம்ஜி அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக கேபிஎம்ஜி மேலும் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு சராசரியாக 9.7 % உயர்வு கிடைக்கும் என கூறியிருந்தோம். ஆனால் 9.4 % உயர்வு கிடைத்தது.

இந்த ஆண்டில் சிறப்பாக செயல்படும் மற்றும் திறமைவாய்ந்த பணியாளர்களுக்கு 14.7 சதவீதம் வரை வழங்குவதற்கு 75 சதவீத நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கின்றன. ஆய்வில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக ஊதிய உயர்வினை வழங்க முடிவெடுத் திருக்கின்றன.

மாறுபடும் ஊதிய கணிப்புகள் இந்த ஆண்டு 15.7 சதவீதம் இருக்க கூடும். கடந்த ஆண்டு இந்த விகிதம் 15.4 சதவீதமாக இருந்தது. மாறும்படும் ஊதிய விகிதம் நிதிச் சேவைகள் துறையில் அதிகமாகவும், என்ஜிஓ -களில் குறைவாகவும் இருக்கிறது என கேபிஎம்ஜி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x