Published : 01 Apr 2018 10:39 AM
Last Updated : 01 Apr 2018 10:39 AM
அசோக் லேலண்ட் நிறுவனம் பேருந்து தயாரிப்புக்கான புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
ஆந்திராவில் முதல் முறையாக அசோக் லேலண்ட் ஆலை அமைக்கிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 4,800 பேருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடா நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மல்லவல்லி என்கிற கிராமத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலை அமைய உள்ளது. புதிய தொழில்நுட்பத்திலான உயர்தர பேருந்துகளை இந்த ஆலையிலிருந்து அசோக் லேலண்ட் தயாரிக்கும்.
விழாவில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வினோத்.கே.தாசரி பேசுகையில், இந்த ஆலை அமைகிறபட்சத்தில் ஆந்திராவில் சேவை பயிற்சி மையங்கள் உள்ளிட்ட தொழில்களும் உருவாக்கப்படும். இதன் மூலம் ஆந்திர பிரதேசத்தில் 5,000த்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT