Published : 27 Apr 2018 09:05 AM
Last Updated : 27 Apr 2018 09:05 AM

ஆக்ஸிஸ் வங்கி நஷ்டம் ரூ.2,189 கோடி

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.2,189 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,225 கோடியாக நிகர லாபம் இருந்தது. 1998-ம் ஆண்டு இந்த வங்கி பட்டியலான பிறகு முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கிறது. வல்லுநர்கள் சராசரியாக ரூ.514 கோடி அளவுக்கு லாபத்தை எதிர்பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,581 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை தற்போது ரூ.7,179 கோடியாக அதிகரித் திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 6.77 சதவீதமாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் 5.28 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 5.04 சதவீதமாகவும் இருந்தது. நிகர வாராக்கடன் 3.40 % உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2.11 சதவீதமாக இருந்தது.

நேற்று பங்குசந்தைகள் உயர்ந்தாலும் காலாண்டு முடிவுகள் மீது இருக்கும் அச்சம் காரணமாக இந்த பங்குகள் சரிந்தன. சந்தை வர்த்தகத்துக்கு பிறகு முடிவுகள் வெளியிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x