Published : 05 Feb 2018 08:43 AM
Last Updated : 05 Feb 2018 08:43 AM

ஜனவரி மாத அந்நிய முதலீடு ரூ.22,254 கோடி

ஜனவரி மாதத்தில் ரூ.22,254 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. நிறுவனங்களின் வருமானம் மற்றும் முதலீட்டின் மீதான லாபம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்த முதலீடு வந்திருக்கிறது. ஆனால் பட்ஜெட்டில் நீண்டகால மூலதன ஆதாய வரி அறிவிக்கப்பட்டவுடன் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது பிரச்சினை ஏதும் இல்லை என மார்னிங் ஸ்டார் நிறுவனத்தின் மூத்த வல்லுநர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா கூறினார்.

ஜனவரியில் இந்தப் பங்கு சந்தைக்கு ரூ.13,781 கோடி அந்நிய முதலீடும், இந்திய கடன் சந்தைக்கு ரூ.8,473 கோடி அந்நிய முதலீடும் வந்திருக்கிறது. மொத்த முதலீடு ரூ.22,254 கோடியாக இருக்கிறது. கடந்த டிசம்பரில் ரூ.3,500 கோடி வெளியேறிய நிலையில் இந்த முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.

இதுதொடர்பாக ஸ்ரீவஸ்தவா மேலும் கூறியதாவது: எதிர்பார்க்கப்பட்டதை விட நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு செயல்பாடு சிறப்பாக வந்திருப்பது, இந்தியாவின் வளர்ச்சி குறித்த ஐஎம்எப் கணிப்பு உள்ளிட்ட சாதகமான சூழலால் அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. பட்ஜெட் அறிவிப்பால் முதலீடுகள் வெளியேறினாலும் இது ஒரு குறுகிய கால நிகழ்வாகவே இருக்கும். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடு. அந்நிய முதலீடு தொடர்ந்து இருக்கும் என்று கூறினார்.

2017-ம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x