Published : 12 Feb 2018 10:16 AM
Last Updated : 12 Feb 2018 10:16 AM
பணமதிப்பு நீக்கத்தின்போது திரும்பப்பெறப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் முழுமையடையவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. திரும்பப் பெறப்பட்ட பணத்தின் உண்மைத்தன்மையைத் தாங்கள் சோதித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்கத்தின்போது திரும்பப்பெறப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது. திரும்பப்பெறப்பட்ட நோட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து தாங்கள் சோதித்து வருவதாகவும் விரைவில் இந்தப் பணி முடிவடையும் என்றும் அந்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜூன்30,2017 வரைப் பெறப்பட்ட பணத்தின் மதிப்பு 15.28 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் உண்மைத்தன்மை சோதனைக்குப் பிறகு இந்த மதிப்பில் மாற்றம் ஏற்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
பணத்தாளின் உண்மைத்தன்மையை அறிய 59 சிவிபிஎஸ் அதிநவீன இயந்திரங்களை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருவதாகவும், வங்கிகளிடம் உள்ள 8 சிவிபிஎஸ் இயந்திரங்களையும் பயன்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 7சிவிபிஎஸ் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT