Published : 02 Feb 2018 01:09 PM
Last Updated : 02 Feb 2018 01:09 PM
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தை சார்ந்த நீண்டகால முதலீடு ஆதாயத்திற்கு வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழன்) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பங்குச்சந்தை சார்ந்த நீண்டகால முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வரியின் மூலம் அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என பட்ஜெட் தகவலும் பங்குசந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 591 புள்ளிகள் சரிந்து, 35,314 புள்ளிகளாக இருந்தது. இதுபோலவே, தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 190 புள்ளிகள் சரிந்து 10,826 புள்ளிகளாக சரிந்தது.
எஸ்பிஐ, யெஸ் பாங்க், ஐசிஐசிஐ, கோட்டக் மகேந்திரா, எச்டிஎப்சி, இண்டஸ்இந்த் உள்ளிட்ட வங்கத்துறை சார்ந்த பங்குகள் அதிகஅளவில் சரிவு கண்டன. அதுபோலவே, பவர்க்ரிடு, கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவு கண்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT