Published : 02 Feb 2018 08:38 AM
Last Updated : 02 Feb 2018 08:38 AM

பட்ஜெட் 2018: பிட்காயின் பரிவர்த்தனை சட்ட விரோதம் என அறிவிப்பு

பிட்காயின் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனையும் சட்ட விரோதமாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார். கடந்த பட்ஜெட் உரையில், கிரிப்டோகரன்ஸிகளுக்கு இந்தியாவில் விதிமுறைகள் உருவாக்கவில்லை. கிரிப்டோகரன்ஸிகளின் பரிவர்த்தனைக்கு ஏதுவாக எந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஏற்கெனவே சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளுக்கு தடை விதித்திருக்கின்றன. தென் கொரியா தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. கிரிப்டோகரன்ஸிகளை ஒழுங்குமுறை படுத்துவதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x