Published : 10 Feb 2018 08:32 AM
Last Updated : 10 Feb 2018 08:32 AM

பாரத ஸ்டேட் வங்கியின் நஷ்டம் ரூ 1,887 கோடி

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) டிசம்பர் காலாண்டு நிகர நஷ்டம் ரூ.1,887 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,152 கோடி அளவுக்கு லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது. வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 111 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8,942 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.18,876 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்கள் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது என வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

வங்கியின் நிகர வட்டி வருமானம் 26.68 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,751 கோடியாக இருந்த வட்டி வருமானம் டிசம்பர் காலாண்டில் ரூ.18,687 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 9.83 சதவீதத்தில் (செப்டம்பர் 2017)இருந்து 10.35 சதவீதமாக (டிசம்பர் 2017) அதிகரித்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 7.23 சதவீதமாக மொத்த வாராக்கடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் நிகர வாராக்கடன் 5.43 சதவீதத்தில் இருந்து 5.61 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 1.66 சதவீதம் சரிந்து முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x