Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM
தமிழக அரசு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ. 1,000 கோடியைத் திரட்ட உத்தேசித்துள்ளது. 10 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை-கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஏலக் கேட்புகள் அன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை முறையில் (இ-குபேர்) விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT