Published : 18 Jan 2018 10:36 AM
Last Updated : 18 Jan 2018 10:36 AM
ஜனவரி 15-ம் தேதி வரையிலான காலத்தில் நேரடி வரி வசூல் 18.7 சதவீதம் உயர்ந்து ரூ.6.89 லட்சம் கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கு மொத்தமாக ரூ.9.8 லட்சம் கோடி வரி வசூல் செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. நிர்ணயம் செய்த தொகையில் 70.3 சதவீத தொகை வசூலாகி இருக்கிறது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரையிலான காலத்தில் கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1.22 லட்சம் கோடி திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையும் சேர்க்கும் பட்சத்தில் ரூ.8.11 லட்சம் கோடி மொத்த வரி வசூல் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது மொத்த வரி வசூல் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த வரி வசூல் 10 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 10.3 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 13.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. நிறுவன வரிகளில் கூடுதல் வரி வசூல் நடந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT