Published : 20 Jan 2018 05:38 PM
Last Updated : 20 Jan 2018 05:38 PM

மத்திய பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரித்து வழங்கினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி

மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கும் முன், அல்வா தயாரித்து வழங்கும் சம்பிரதாய நடைமுறை இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதில் கலந்து கொண்டு அல்வா தயாரித்து வழங்கினார்.

வரும் 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் அந்த ஆண்டு முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. எனவே தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான கடைசி பட்ஜெட் இது தான். எனவே இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் உள்ளன.

இந்நிலையில் பட்ஜெட் தயாரிப்பு முடிந்து அதனை அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது. வழக்கமாக பட்ஜெட் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விநியோகம் செய்வது வழக்கம். அதன்படி, டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். அல்வா தயாரித்து வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x