Published : 17 Jan 2018 10:29 AM
Last Updated : 17 Jan 2018 10:29 AM
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், லாஜிஸ்டிக்ஸ் பிரிவு இந்திய தொழிலகக் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. லாஜிஸ்டிக் துறையில் இணைந்து செயல்படுவதற்கான இந்த ஒப்பந்தம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
மத்திய வர்த்தகத் துறை இதற்காக தனியாக செயல்பாட்டு குழுவை உருவாக்கும். இதன் இணைத் தலைவராக சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் பிரிவு செயல்படும். சிஐஐ அமைப்பின் இந்த மையம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சங்கிலி தொடர் மேலாண்மை திறன் வளப்பு மையமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் படி சிஐஐ அமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் துறை சந்திக்கும் சிக்கல்களை அடையாளம் காண்பதுடன் அதற்கான தீர்வுகளையும் வர்த்தக துறையின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு அளிக்கும். லாஜிஸ்டிக்ஸ் துறையின் திறனை மேம்பாடுத்துவதற்காக மாநில அரசுகள், முதலீட்டாளர்களுடன் இந்த அமை ப்பு இணைந்து செயல்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT