Published : 05 Jan 2018 10:07 AM
Last Updated : 05 Jan 2018 10:07 AM

அடுத்த ஐந்தாண்டுகளின் சராசரி வளர்ச்சி 6.7 சதவீதம்: பிட்ச் கணிப்பு

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என பிட்ச் கணித்திருக்கிறது. தவிர வேகமாக வளர்ச்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக பிட்ச் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் திறனை விட குறைவான வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டிருந்தாலும், மற்ற நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட இந்தியாவின் வளர்ச்சி அதிக மாக இருக்கும் என பிட்ச் கூறியிருக்கிறது.

சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியலில் இந்த இரு நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கின்றன.

இது தொடர்பாக பிட்ச் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியர்களின் சராசரி வயது, பணிக்கு செல்வதற்கு தயாராக இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஆகிய காரணங்களால் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் இந்தியர்களின் வாழ்க்கை தரமும் உயரும். இதே காரணங்களால் இந்தோனேஷியா, மெக்ஸிகோ, துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகளிலும் இதே நிலைமை இருக்கிறது என பிட்ச் தெரிவித்திருக்கிறது.

ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. ஆனால் செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அடுத்த இரு காலாண்டுகளில் 7 சதவிதத்துக்கு மேல் வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x