Published : 18 Jul 2014 09:00 AM
Last Updated : 18 Jul 2014 09:00 AM
தனியார் பொறியியல் கல்லூரி களில் அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டால் அரசு அமைத்துள்ள குழு விசாரிக்கும் என்று சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழக் கிழமை உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கிவைத்து தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசினார். இதற்கு பதிலளித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:
3 பேர் குழு விசாரிக்கும்
தனியார் பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முன்னாள் நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையி லான குழு நிர்ணயித்துள்ளது. அதைவிட அதிகமாக கட்டணம் வசூலித்தாலோ, மிக அதிகமாக நன்கொடை வசூலித்தாலோ அதுகுறித்து அரசு அமைத்துள்ள 3 பேர் குழு விசாரிக்கும்.
எந்த கல்லூரியில், எந்த மாணவரிடம் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூலிக்கப்பட்டது என்று உறுப்பினர் ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங் கள், மத்திய அரசின் கட்டுப்பாட் டில் வருவதால் அவை கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாநில அரசு தலையிட முடியாது.
இவ்வாறு அமைச்சர் பழனியப் பன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT