Published : 08 Jan 2018 09:58 AM
Last Updated : 08 Jan 2018 09:58 AM

செயில் நிறுவனம் தனது செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும்: நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தல்

பொதுத்துறை நிறுவனமான செயில் தனது செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது. வளர்ச்சிக்கான தடைகளை நீக்கி ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக செயில் நிறுவனம் செயல்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

நிலக்கரி மற்றும் உருக்குக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இந்த துறைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தது. இந்தக் குழுவுக்கு ராகேஷ் சிங் தலைவராக உள்ளார்.

இந்தக் குழு சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2016-17-ம் ஆண்டில் செயில் நிறுவனம் இதுவரை அல்லாத அளவுக்கு 15.73 மில்லியன் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. தற்போது செயில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு செயில் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சந்தையில் மற்ற நிறுவனங்களோடு போட்டிபோடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். செயில் நிறுவனத்தினுடைய ரூர்கலா உருக்கு ஆலை, ஐஐஎஸ்சிஓ ஆலை, அலாய் உருக்கு ஆலை, விஸ்வேஸ்வரய்யா உருக்கு ஆலை போன்றவை மிக மோசமான செயல்பாடுகளை கொண்டிருக்கின்றன. 2016-17-ம் ஆண்டில் இந்த நிறுவனங்கள் தனது உற்பத்தித் திறனை விட குறைவாகவே உற்பத்தி செய்துள்ளன. இந்த ஆலைகள் தனது குறைபாடுகளை நீக்குவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்.ஆலையில் உற்பத்தி திறன் அளவுக்கு உருக்கு உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x