Published : 26 Dec 2017 09:51 AM
Last Updated : 26 Dec 2017 09:51 AM

2017-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு ரூ. 6 லட்சம் கோடி உயர்வு: சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்திய மியூச்சுவல் பண்ட் துறையின் சொத்து மதிப்பு 2017-ம் ஆண்டில் ரூ. 6 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2017-ம் ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 9 லட்சம் எஸ்ஐபி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் துறையில் எஸ்ஐபி மூலமாக ரூ.5,893 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 2016-ம் ஆண்டில் ரூ.3,973 கோடியாக இருந்தது.

இது தொடர்பாக வெளிவந்துள்ள புள்ளிவிவரங்கள்படி, 2017-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி 2018-ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் மக்கள் நிதி சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் விழிப்புணர்வு பிரசாரங்களும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்து ள்ளன.

நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 2017-ம் ஆண் டில் 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது 2016-ம் ஆண்டு டிசம்பர் மாத த்தில் ரூ. 16.46 லட்சம் கோடி யாக இருந்தது.

மியூச்சுவல் பண்ட் துறையின் வளர்ச்சிக்கு இது குறித்து மக்களிடம் தெளிவுகளை உருவாக்க வேண்டும். சரியான நீண்ட கால முதலீட்டு வாய்ப்பு என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டுமென்று பிராங்க்ளின் டெம்பி ள்டன் இன்வெஸ்ட்மெண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சாப்ரே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குச் கொண்டு செல்ல ஜன்தன் கணக்கு, ஆதார் எண், மொபைல் எண் போன்றவற்றையும் இணைத்தால் எளிதான சேவை கிடைக்கும். இதன் மூலம் முதலீடு செய்வது எளிதாகும் என்றும் கூறினார்.

இந்தியாவில் 42 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளன. மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி என்கிற அளவை முதல்முறையாக 2014-ம் ஆண்டு மே மாதம் எட்டியது. அதன்பிறகு மூன்றரை ஆண்டுகளில் இரண்டரை மடங்கு வளர்ச்சியாக நவம்பர் மாதத்தில் ரூ.23 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று சாப்ரே கூறினார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x