Published : 12 Dec 2017 09:59 AM
Last Updated : 12 Dec 2017 09:59 AM

மத்திய அரசின் முதியோர்ஓய்வூதிய தொகையை உயர்த்துங்கள்: ஜேட்லியிடம் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை யை ₹200-லிருந்து ₹1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களிடம் நேற்று கருத்துகளை ஜேட்லி கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலரும் தற்போது வழங்கப்படும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் தொகையை உயர்த்தி அளிக்கவேண்டும் என்றனர். இப்போது வழங்கப்படும் தொகை எதற்குமே போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக் காட்டினர்.

ஓய்வூதியத் தொகையை உயர்த்தினால் அரசின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றார் ஜேட்லி. ஆனால் இத்தகைய உயர்வு அதிகமாக இருக்காது என்றும் நிபுணர்கள் குறிப்பிட்ட னர்.

அதேபோல பெண்களுக்கு மகப்பேறு உதவித் தொகை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விஷயம் என்றும் பொருளாதார நிபுணர் ஜீன் டிரெஸ்ஸே சுட்டிக் காட்டினார்.

நிதிப் பற்றாக்குறை இலக்கை கட்டுக்குகள் வைப்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுபினர் ரதின் ராய் கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x