Published : 22 Dec 2017 10:30 AM
Last Updated : 22 Dec 2017 10:30 AM

` பொருளாதாரம் 7 லட்சம் கோடி டாலராக உயரும்’

 

 

2030-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7 லட்சம் கோடி டாலராக உயரும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் தேப்ராய் கூறியுள்ளார். 2035-ம் ஆண்டு முதல் 2040-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலராக (தற்போதைய நாணய பரிமாற்ற அடிப்படையில்) உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்.

இந்திய பொருளாதாரம் உயர்ந்தாலும், 2030-ம் ஆண்டு தனிநபர் வருமானம் 4,000 டாலருக்கு குறைவாகவே இருக்கும். அப்போதைக்கு பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த தொகை குறைவானதாக இருக்கும். தற்போது இளைஞர்கள் அரசு வேலை தேடுபவர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்கு வழிமுறையை உருவாக்க வேண் டும் என தேப்ராய் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x