Published : 18 Dec 2017 10:08 AM
Last Updated : 18 Dec 2017 10:08 AM
குஜராத் தேர்தல் நிலவரம் காரணமாக பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. குஜராத்தில் ஆளும் பாஜகவும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக முதல்கட்ட முன்னிலை நிலவரம் தெரிவித்தன.
இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவு கண்டது. பின்னர் சற்று நிலைமை சீரடைந்து 100 புள்ளி வீழ்ச்சிடைந்து வர்த்தகமாகியது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,300 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 10,296 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT