பங்குச்சந்தை | சென்செக்ஸ் 411 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 411 புள்ளிகள் வீழ்ச்சி
Updated on
1 min read

மும்பை: பங்குச்சந்தைகள் இன்று காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 411.06 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,841.28 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 417 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,834 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 117 புள்ளிகள் வீழ்ந்து 19,268 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின. காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 411.06 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,841.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.55 புள்ளிகள் உயர்ந்து 19,321.15 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்கள் ரிசர்வ் வங்கியின் எம்பிசி அறிக்கையின் பணவீக்க எச்சரிக்கை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின. பெரும்பாலான பங்குகள் சரிவில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஜியோ ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஜியோ ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டிசிஎஸ், ஐடிசி,ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், விப்ரோ, எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in