Published : 07 Dec 2017 10:16 AM
Last Updated : 07 Dec 2017 10:16 AM
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) அடுத்த தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய தலைவர் டி.எஸ். விஜயனின் ஐந்தாண்டு பதவி காலம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முடிவடைகிறது. காப்பீட்டு ஒழுங்குமுறை விதிகளின்படி, ஐஆர்டிஏ தலைவரின் பதவி காலம் ஐந்தாண்டுகள் ஆகும். வீடு மற்றும் கார் வசதிகள் தேவைப்படவில்லை எனில் அவருக்கு மாதம் ரூ.4.50 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
புதிய தலைவரை தேடுவதற்கான அறிக்கையை மத்திய நிதிச்சேவைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் 30 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளில் செயலாளராக பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பதவியில் இருந்திருக்க வேண்டும். தனியார் துறையில் பணியாற்றியவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT