Published : 05 Dec 2017 10:10 AM
Last Updated : 05 Dec 2017 10:10 AM
சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான ஹைன்ஸ், டாடா ஹவுஸிங் நிறுவனத்தின் மும்பை குடியிருப்பு திட்டத்தில் ரூ.150 முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் வீட்டு வசதி திட்டங்களை விரிவாக்கம் செய்யும் வகையில் டாடா ஹவுஸிங் நிறுவனம் மும்பையில் தானே பகுதியில் குடியிருப்பு திட்டத்தினை மேற்கொள்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹைன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே இரண்டு வர்த்தக கட்டுமான திட்டங்களை தொடங்கியுள்ளது. குர்காவ்னில் ஹாரிசன் செண்டர் மற்றும் ஸ்கைவியூ பார்க் என இரண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும் கன்ஸிஸ்டண்ட் குழுமம் தொடங்க உள்ள குடியிருப்பு திட்டத்திலும் முதலீடு செய்ய உள்ளது.
இதனைத் தொடர்ந்து டாடா ஹவுஸிங் நிறுவனத்துடன் கூட்டு சேர்கிறது. இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளன. மும்பையில் டாடா ஹவுஸிங் தொடங்கும் வீட்டு திட்டத்தில் ஹைன்ஸ் நிறுவனம் 23 மில்லியன் டாலர் ( ரூ.150கோடி) முதலீட்டினை மேற்கொள்ளும்.
``சொகுசு வீடுகள் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான நீண்ட கால உத்தியாக ஹைன்ஸ் நிறுவன கூட்டு இருக்கும்`` என்று டாடா ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சிஇஓ-வுமான போர்டின் பானர்ஜி கூறினார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT