Published : 18 Dec 2017 10:05 AM
Last Updated : 18 Dec 2017 10:05 AM
பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசாங்கத்தின் பங்கினை 33 சதவீதமாக குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை (சிஐஐ) விடுத்திருக்கிறது. இதன் மூலம் வாராக்கடன் அதிகமுள்ள வங்கிகளை பலப்படுத்த வேண்டும் என சிஐஐ தெரிவித்திருக்கிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளை இலக்காக வைத்து மத்திய அரசு இந்த திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். 33 சதவீதமாக குறைக்கும் சமயத்தில் ஓட்டுரிமையை குறைத்துக்கொள்ள தேவையில்லை. ஓட்டுரிமையை தக்க வைக்க முன்னுரிமை பங்குகளாக விலக்கி கொள்ளலாம். (பங்குகளுக்கு ஓட்டுரிமை உண்டு, முன்னுரிமை பங்கு களுக்கு ஓட்டுரிமை கிடையாது)
தற்போது பொதுத்துறை வங்கிகளில் குறைந்த பட்சம் 58 சதவீதம் அளவுக்கு அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. 52 சதவீதம் வரை குறைக்கலாம் என விதி முறை இருக்கிறது. இருந்தாலும் பல வங்கிகளில் 80 சதவீதம் வரை அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. 4 வங்கிகளில் மட்டும் அரசுக்கு 52 சதவீத பங்கு இருக்கிறது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கணக்கீடு விதிமுறைகள் பின் பற்றப்படுகிறது. இதனால் வாராக்கடனுக்காக கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கும். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும் என்றும் சிஐஐ தெரிவித்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்த மத்திய அரசிடம் ஆறு திட்டங்களை இந்திய தொழிலக கூட்டமைப்பு சமர் பித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT