சென்செக்ஸ் 106  புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 106  புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 106 புள்ளிகள் (0.16 சதவீதம்) சரிவடைந்து 65,846 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் (0.13 சதவீதம்) சரிந்து 19,570 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாளில் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. பின்னர் சரிவடையத் தொடங்கின. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக் 39.27 புள்ளிகள் சரிவடைந்து 65914.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.80 புள்ளிகள் உயர்ந்து 19,602.10 ஆக இருந்தது.

அமெரிக்க பணவீக்க தரவுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் அறிவிப்புகள் குறித்து முதலீட்டாளர்களின் எச்சரிக்கையுணர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 106.98 புள்ளிகள் சரிவடைந்து 65,846.50 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26.45 புள்ளிகள் உயர்ந்து 19,570.85ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, மாருதி சுசூகி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பவர் கிரிடு கார்ப்பரேஷன், எம் அண்ட் எம், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்ட்ஸ்இன்ட் பேங்க் பாரதி ஏர்டெல்,டாடா ஸ்டீல், ஐடிசி, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in