Published : 01 Nov 2017 10:34 AM
Last Updated : 01 Nov 2017 10:34 AM
ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் நேற்று 8 சதவீதம் உயர்ந்து முடிந்தன. பெயின் கேபிடல் நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கியில் 5 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் நேற்று உயர்ந்தன. பெயின் கேபிடல் நிறுவனம் 75 கோடி டாலர் முதல் 100 கோடி டாலர் வரை ஆக்ஸிஸ் வங்கியில் முதலீடு செய்ய இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது.
இதனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 8 சதவீதம் உயர்ந்து 523 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. ஆனால் இந்த முதலீடு குறித்து பெயின் கேபிடல் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. கடந்த செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 5.9 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4.17 சதவீதமாக மொத்த வாராக்கடன் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT