Published : 09 Nov 2017 09:56 AM
Last Updated : 09 Nov 2017 09:56 AM
வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2வது காலாண்டு நிகர லாபம் 14% உயர்ந்து ரூ.334 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.294 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 31% அதிகரித்து ரூ.6,046 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இது ரூ. 4,622 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் 4,437 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2017-18 நிதியாண்டில் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16% அதிகரித்து ரூ.10,284 கோடியாக உள்ளது.
தொடர்ச்சியாக இந்தியாவின் மதிப்பு மிக்க 40 பிராண்டுகளில் அசோக் லேலண்ட் இருந்து வருகிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் பொருளாதாரத்தில் குறுகிய கால தேக்கம் இருந்தாலும், நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோபால் மகாதேவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT