

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை கடும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 581 புள்ளிகள் சரிவடைந்து 67,990 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 156 புள்ளிகள் சரிந்து 19,822 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது.காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 574 புள்ளிகள் சரிவடைந்து 66,997.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
135.45 புள்ளிகள் சரிந்து 19,843.70 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் நிறைவடைந்திருந்த போதிலும், உலகளாவிய சந்தைகளின் பலவீனமான குறிப்புகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இன்போசிஸ் பங்குகளின் இழப்புகளால் பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்ட்ஸ்ட்ரீஸ், என்டிபிசி, எம் அண்ட் எம், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.
இன்போசிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனலீவர், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.