

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை மீண்டும் இதுவரையில்லாத உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 474 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயர்வடைந்து 67,571 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 19,979 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்றே சரிவுடன் தொடங்கியது. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 109.24புள்ளிகள் சரிவடைந்து 66,988.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.85 புள்ளிகள் சரிந்து 19,799.30 ஆக இருந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் நிதிச் சேவையான ஜியோ பைனான்ஸியஸ் சர்வீஸின் சிறப்பு ப்ரீ ஓபன் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்திய காரணத்தால் காலை வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் ஆரம்ப சரிவில் இருந்து மீண்டு நிலைபெறத் தொடங்கின. வர்த்த நேரத்தின் முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 67,616 வரை உயர்ந்தது. நிஃப்டி 20,000 ஐ 9 புள்ளிகளில் தவற விட்டு 19,991 ஆக புதிய உச்சத்தை அடைந்திருந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 474.46 புள்ளிகள் உயர்வடைந்து 67,571.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146.00 புள்ளிகள் உயர்ந்து 19,979.15 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, கோடாக் மகேந்திரா, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டெக் மகேந்திரா, நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ்,எம் அண்ட் எம், பாஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், எல் அண்ட் டி, விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.