Published : 06 Nov 2017 10:38 AM
Last Updated : 06 Nov 2017 10:38 AM

வேர்ல்டு ஃபுட் இந்தியா கண்காட்சி ரூ.74,000 கோடிக்கு முதலீடுகள் குவிந்தன: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தகவல்

வேர்ல்டு ஃபுட் இந்தியா கண்காட்சி மூலமாக உணவுப்பதப் படுத்துதல் துறையில் ரூ.74,000 கோடிக்கு (1,125 கோடி டாலர்) முதலீடுகள் குவிந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முதலீடு களையும் சேர்த்தால் மொத்தம் 1,884 கோடி டாலருக்கு முதலீடுகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய வேர்ல்டு ஃபுட் இந்தியா கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று கண்காட்சி இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதாவது: இந்த கண்காட்சியின் மூலமாக இதுவரை 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.74,000 கோடி. இந்த முதலீடுகள் மூலம் உணவுப்பதப்படுத்துதல் துறை தற்போது இருக்கும் நிலையை விட 10% வளர்ச்சியை அடையும். அதுமட்டுமல்லாமல் இந்த கண்காட்சி யில் மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் உணவுப்பதப்படுத்துதல் கொள்கையை அறிவித்துள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டியது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x