Published : 10 Jul 2014 11:52 AM
Last Updated : 10 Jul 2014 11:52 AM
2012-13ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனம் ஓ.என்.ஜி.சி. என்றும் அதிக நஷ்டத்தை அடைந்தது பிஎஸ்என்எல் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2012-13ம் நிதி ஆண்டில் லாபமீட்டிய 149 நிறுவனங்களின் மொத்த லாபம் 1,43,559 கோடி ரூபாய். மாறாக நஷ்டமடைந்த 79 நிறுவனங்களில் இழப்பு 28,260 கோடி ரூபாய் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன், கோல் இந்தியா மற்றும் பிஹெச்இஎல் ஆகிய ஐந்து நிறுவனங்கள் லாபமீட்டிய நிறுவனங்களின் பட்டியலில் முதலில் இருக்கின்றன.
மாறாக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர் இந்தியா, சிபிசிஎல் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஆகியவை அதிக நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஆகும். டிவிடெண்ட், வட்டி ஆகி யவை மூலமாக மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் 2011-12ம் ஆண்டை விட 2012-13ம் ஆண்டில் சிறிதளவு அதிகரித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT