Published : 15 Oct 2017 12:00 PM
Last Updated : 15 Oct 2017 12:00 PM
புதிய இந்திய தரச்சான்று சட்டம் 2016 அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. பல்வேறு கருத்துக் கேட்புக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதன்படி பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பதப்படுத்தல், சேவை உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்த அனைத்து தயாரிப்புகளும் தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். விலங்குகளின் நலன், புவி காப்பு சார்ந்த வர்த்தக நடைமுறைகள் அனைத்துக்கும் பிஐஎஸ் சான்று கட்டாயமாகிறது. இப்புதிய சட்டம் இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கியுள்ளது.
உயர் மதிப்பிலான உலோகங்களுக்கு (தங்கம்) ஹால்மார்க் முத்திரை அவசியமாகிறது. இது தவிர்த்த பிற தயாரிப்புகளுக்கு பிஐஎஸ் எனப்படும் தரச்சான்று அவசியமாகும். இந்த சட்டம் பன்முக அளவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுய மதிப்பீடு அடிப்படையிலும் சான்றளிக்க வகை செய்துள்ளது.இதனால் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளின் தரம் குறித்து சுய சான்று உறுதி அளிப்பதன் மூலம் பெற முடியும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT