சென்செக்ஸ் 466 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 466 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 466 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்வடைந்து 63,384 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 137 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 18,826 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது மெல்ல உயரத் தொடங்கியது. காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 282.40 புள்ளிகள் உயர்வடைந்து 63,200.03ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.95 புள்ளிகள் உயர்ந்து 18,747.05 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதமான சூழல்களுக்கு மத்தியில் வங்கி, நிதி மற்றும் மூலதனப்பொருள், எப்எம்ஜிசி பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாளை புதிய உச்சத்தில் ஏற்றம் பெற்று நிறைவு செய்தன. வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 602 புள்ளிகள் வரை உயர்ந்து 63,520 ஆகவும், நிஃப்டி 176 புள்ளிகள் வரை உயர்ந்து 18,864 ஆகவும் ஏற்றம் பெற்றிருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 466.95 புள்ளிகள் உயர்வடைந்து 63,384.58 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி137.90 புள்ளிகள் உயர்ந்து 18,826.00 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், என்டிபிசி, எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

விப்ரோ, டிசிஎஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in