பங்குச்சந்தை | சென்செக்ஸ் 328 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 328 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வடைந்து 62,981 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 18,676 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 328.21 புள்ளிகள் உயர்வடைந்து 63,052.92ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.10 புள்ளிகள் உயர்ந்து 18,691.60 ஆக இருந்தது.

எதிர்பார்த்ததை விட குறைந்திருந்த மே மாத சில்லறை பணவீக்கம் மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளின் எழுச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, என்டிபிசி, எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in