சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 99 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்வடைந்து 62,724 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயந்து 18,601 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:52 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.11 புள்ளிகள் உயர்வடைந்து 62,661.74 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 32.30 புள்ளிகள் உயர்ந்து 18,595.70ஆக இருந்தது.

காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைதள், தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே பயணித்தது. இருந்த போதிலும் உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்கள், நாளின் பிற்பகுதியில் வெளியாகவிருக்கும் மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு குறித்த முதலீட்டாளர்களின் எதிர்ப்பு போன்ற காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 99.08 புள்ளிகள் உயர்வடைந்து 62,724.71 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.10 புள்ளிகள் வீழ்ந்து 18,601.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், என்டிபிசி, டிசிஎஸ், டெக் மகேந்திரா, நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திர பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வு அடைந்திருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in