சென்னை வர்த்தக மையத்தில் நவீன ரக இயந்திர கண்காட்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நவீன ரக தொழில் இயந்திர கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 15-ல் தொடங்குகிறது.

ஜூன் 19 வரையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஜப்பான், சீனா, ஜெர்மனி, பெல்ஜியம், கனடா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து 435 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இக்கண்காட்சியை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஒருங்கிணைக்கிறது.

தற்போது தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், பிளாக்செயின், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளன.இவற்றை பிரதிபலிக்கும் விதமான இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. அத்துடன் நிபுணர்களின் கருத்தரங்குகளும் நடைபெறும் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in