Published : 11 Oct 2017 10:25 AM
Last Updated : 11 Oct 2017 10:25 AM
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்த பொருளா தார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த குழு நேற்று முன்தினம் அரசின் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து தனது முதல் கூட்டத்தை இன்று நடத்த உள்ளது.
உடனடி முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்த குழு ஆலோசிக்க உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு விரிவான ஆலோசனையை இந்த குழு அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில் செப்டம்பர் 26-ம் தேதி இந்த குழு உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் பிபேக் தேப்ராய் இந்த குழுவின் தலைவராக உள்ளார்.
நிதி ஆயோக்கின் முதன்மை ஆலோசகர் ரத்தன் பி வாட்டாள் மற்றும் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், அஷிமா கோயல் உள்ளிட்டவர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT