பங்குச்சந்தை  | சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை  | சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்வடைந்து 63,200 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18,739 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 136.60 புள்ளிகள் உயர்வடைந்து 63,279.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22.55 புள்ளிகள் உயர்ந்து 18,748.95 ஆக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சீரான ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்ட்ஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன. கோடாக் மகேந்திரா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், விப்ரோ, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in