பங்குச்சந்தை | சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 358 புள்ளிகள் உயர்வடைந்து 62,905 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி100 புள்ளிகள் உயர்ந்து 18,634 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன தொடங்கின. காலை 9:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 318.80 புள்ளிகள் உயர்வடைந்து 62,865.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.20 புள்ளிகள் உயர்ந்து 18,605.30 ஆக இருந்தது.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு ஒப்பந்தம் குறித்த தீர்மானம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து, அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வடைந்தன. அதனால் உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இந்த வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வில் இருந்தன. டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in