Published : 31 Oct 2017 10:44 AM
Last Updated : 31 Oct 2017 10:44 AM
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆட்டோமோடிவ் கண்காட்சி நவம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் தொடங்கி வைக்க உள்ளார். மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். வாசுகியும் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
மெஸே பிராங்பர்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் நடத்தப்படும் 6-வது கண்காட்சியில், அட்வான்ஸ்டு கிராபிக் சிஸ்டம், அம்வியான் ஆடோமோடிவ், கார்ல் ஜெய்ஸ், சிஎல்பிஏ, டிசைன்டெக், டோபாக், ஈபோஸ் கிரேன்ஸ், இஃபிம் எலெக்ட்ரானிக்ஸ், இங்கர்சால் ராண்ட், நிகோன், ஓம்ரோன், பானாசோனிக், பாலிவொர்க்ஸ், டால் மேன்யூபேக்சரிங், டங்கர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்த உள்ளன என்று மெஸே பிராங்பர்ட் டிரேட் ஃபேர் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜ் மனேக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT