ஈரோட்டில் வெண்மைப் புரட்சியை நிகழ்த்திய பரமசிவம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஈரோட்டில் வெண்மைப் புரட்சியை நிகழ்த்திய பரமசிவம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரமசிவம் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்று அறிந்து வருத்தமுற்றேன் என முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்:

"103 வயதான எஸ் கே பரமசிவம் பூதான இயக்கத்தில் பங்கேற்றுத் தனது நிலங்களை நிலமற்ற ஏழை உழவர்களுக்கு வழங்கியவர் ஆவார். ஈரோடு மாவட்டத்தில் வெண்மைப் புரட்சியை நிகழ்த்தியதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in