Published : 30 Jan 2022 10:52 AM
Last Updated : 30 Jan 2022 10:52 AM

அகிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகிற்குத் தந்த காந்தியடிகள்: தினகரன் புகழாரம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: அகிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகிற்குத் தந்த அண்ணல் காந்தியடிகள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாத்மா என மக்களால் அழைக்கப்படும் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் 74வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

டிடிவி தினகரன்

இதனிடையே, காந்தியின் நினைவு தினத்தையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"அகிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகிற்குத் தந்த அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் இன்று!

ஒவ்வோர் இந்தியரும் ஒற்றுமையோடு வாழ்ந்திட ரத்தம் சிந்திய நம் தேசத்தந்தையின் நினைவைப் போற்றி வணங்கிடுவோம்."

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x