Published : 28 Dec 2021 03:47 PM
Last Updated : 28 Dec 2021 03:47 PM

ரூ.93 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள கரூர் ஆபிசர்ஸ் க்ளப்

கரூர்: கரூர் ஆபிசர்ஸ் க்ளப், அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.93 லட்சத்திற்கும் மேலான பாக்கித் தொகையைச் சட்டத்திற்கு உட்பட்டு வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் ஆபிசர்ஸ் க்ளப்பில் சட்டத்திற்குப் புறம்பாக சீட்டாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடப்பதாக வந்த தகவலையடுத்து இன்று (டிச.28-ம் தேதி) மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே, ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், "கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆபிசர்ஸ் க்ளப்பினை சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை சாதாரண, சாமானிய மக்களும் பயன்படுத்திக் கொள்ளும் இடமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஆபிசர்ஸ் க்ளப் சார்பில் தற்போது அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.93 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனைச் சட்டத்திற்கு உட்பட்டு வசூல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x