Published : 28 Dec 2021 02:50 PM
Last Updated : 28 Dec 2021 02:50 PM

பெண்ணைத் தீயிட்டு எரித்த நபருக்கு ஆயுள் தண்டனை: கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணைத் தீயிட்டு எரித்த உறவினருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணேசபுரத்தை அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (52). இவரது மகள் நந்தினி (19). நந்தியின் தாய் இறந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள காலண்ணம்பட்டியை அடுத்த காக்காத்தோப்பில் உள்ள சித்தி வீட்டில் தங்கி அங்குள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

சித்தியின் கணவர் ராஜ் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நந்தினி காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தந்தை வெங்கடாசலத்திடம் நந்தினி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரைப் பெண் பார்க்க கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி சுப்ரமணியபுரத்திற்கு வெங்கடாசலம் வரக்கூறியுள்ளார். இதையடுத்து அன்று காலை இயற்கை உபாதையைக் கழிக்க நந்தினி அந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

நந்தினியின் காதலில் விருப்பமில்லாததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சித்தியின் கணவர் ராஜ் (41) காட்டுப் பகுதியில் வைத்து நந்தினி மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த நந்தினி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதையடுத்து குளித்தலை போலீஸார் ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தினி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து ராஜ் மீதான கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நசீமாபானு, நந்தினியைத் தீயிட்டு எரித்த சித்திக் கணவர் ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x